Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மஹாராஷ்டிராவில் ஒரே நாளில் 3,390 பேருக்கு கொரோனா; 120 பேர் பலி

ஜுன் 15, 2020 07:27

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 1.08 லட்சத்தை நெருங்கியது.

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நாட்டில் அதிக கொரோனா பாதிப்புக்குள்ளான மாநிலமாக மஹாராஷ்டிரா உள்ளது. இந்நிலையில், அங்கு புதிதாக இன்று(ஜூன் 14) மட்டும் 3,390 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு 1,07,958 ஆக அதிகரித்தது.

இன்று மட்டும் 120 பேர் பலியானதையடுத்து, மாநிலத்தில் மொத்த பலி எண்ணிக்கை 3,950 ஆக உயர்ந்தது. இன்று மட்டும் 1,632 பேர் குணமாகினர்; 50,978 பேர் இதுவரை குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்