Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 2 ஆயிரம் பேர் பலி

ஜுன் 17, 2020 05:34

புதுடெல்லி: இந்தியாவில் நேற்று(ஜூன் 16) ஒரே நாளில் 2,003 பேர் கொரோனாவால் உயிரிழந்ததை தொடர்ந்து, பலி எண்ணிக்கை 11,903 ஆக அதிகரித்துள்ளது. மஹாராஷ்டிராவில் மட்டும் ஒரே நாளில் 1,409 பேர் உயிரிழந்தனர். நேற்று (ஜூன் 16) ஒரே நாளில்10,974 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.5 லட்சமாக அதிகரித்தது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 10,974 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 54 ஆயிரத்து 065 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 227 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 935 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 2003 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 903 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில், 6 ஆயிரத்து 922 பேர் குணமடைந்தனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மாநில வாரியாக பாதிப்பு விவரம்


மாநிலம்- பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை- பலி
மஹாராஷ்டிரா - 1,13,445- 5,537

தமிழகம்- 48,019-528

டில்லி -44,688-1,837

குஜராத்-24,577-1,533

உ.பி.,-14,091-417

ராஜஸ்தான்-13,216-308

மேற்கு வங்கம்- 11,909-495

ம.பி.,-11,083-476

ஹரியானா-8,272-118

கர்நாடகா-7,530-94

ஆந்திரா -6,841-88

பீஹார்-6,778-41

தெலுங்கானா-5,406-191

காஷ்மீர்-5,298-63

அசாம்-4,319-08

ஒடிசா-4,163-11

பஞ்சாப் 3,371-72

கேரளா-2,622-20

உத்தர்காண்ட்-1,942-25

ஜார்க்கண்ட்-1,839-09

சத்தீஸ்கர்-1,781-09

திரிபுரா-1,092-01

லடாக்-649-01

கோவா-629-0

ஹிமாச்சல பிரதேசம்-56-008

மணிப்பூர்-500-0

சண்டிகர்-358-06

புதுச்சேரி-216-6

நாகலாந்து-179-0

மிசோரம்-121-0

தலைப்புச்செய்திகள்