Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொடூர கொரோனா திண்டாடி ஓடும் அஞ்சாதீர்கள்: விஜயபாஸ்கர் நம்பிக்கை

ஜுன் 19, 2020 09:38

சென்னை: கொடூர கொரோனா திண்டாடி ஓடும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர்  நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

கொரோனா தொடர்பாக, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில், 12 நாள் ஊரடங்கு நேற்று  துவங்கிய நிலையில், டுவிட்டரில் விஜயபாஸ்கர் இந்த விஷயத்தை தெரிவித்துள்ளார். அஞ்சாத அயல்நாடுகளும் திண்டாடி நடுங்கும் கொடூர கொரோனா திண்டாடி ஓடும். விலகியிருந்து விழிப்புடன் இருந்து வென்றிடுவோம். பெருந்தொற்று அரக்கனை கண்டு அஞ்சாதீர்கள். நெஞ்சுரம் கொள்ளுங்கள் முகக்கவசம் தரித்து கைகளை சுத்தப்படுத்தி அநாவசியம் தவிர்த்து வீட்டிலிருங்கள் அடங்கும் தொற்று.

நமது அரசு முன்னின்று மக்களை காக்கும். நாங்கள் இருக்கிறோம் போர்க்களத்தில். மருத்துவப் பணியாளர்களாக காவல்துறை வீரர்களாக உங்களுக்காக போராடுகிறோம். ஒத்துழைப்பு மட்டும் தந்து நம்பிக்கையோடு காத்திருங்கள். கொரோனாவை வீழ்த்துவோம்.
இவ்வாறு டுவிட்டரில் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

தலைப்புச்செய்திகள்