![](admin/uploads/.5f856a0dd19301.08079919.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி: திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸிலிருந்து காக்கவும், அறுவை சிகிச்சை மற்றும் குழந்தைப்பேறு உள்ளிட்ட மருத்துவத் தேவைக்கு அரசு மருத்துவமனைக்கு அதிகமான ரத்தம் தேவைப்படுகிறது.
எனவே, ரத்த தட்டுப்பாட்டை போக்க திருச்சி மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் அசோக் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி அரசு மருத்துவமனையுடன் இணைந்து ரத்ததான முகாம் துரைசாமிபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில்
கிழக்கு பகுதி தலைவர் ஷாஜகான் தலைமையில் நடைபெற்றது.
மாநகர மாவட்ட தலைவர் சுரேஷ் ரத்ததான முகாமை துவக்கி வைத்தார் இம்முகாமில் மாநகர் மாவட்ட செயலாளர் லெனின், மாவட்ட பொருளாளர் ஜெய்குமார், மாவட்ட துணைத்தலைவர் பாரதிசீனிவாசன், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ராஜா, வேர்கள் அறக்கட்டளை நிறுவனர் அடைக்கலராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ரத்ததான முகாமில் 7 பெண்கள் உட்பட 70 க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினர். ரத்ததானம் வழங்கிவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முன்னதாக மருத்துவக் குழுவினர் ரத்தம் வழங்கும் நபர்களை பரிசோதனை மேற்கொண்ட பின்னர் ரத்தம் வழங்க அனுமதித்தனர்.