![](admin/uploads/.60cdeb18cbf001.08328262.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி: திருச்சி வயலூர் ரோடு, சீனிவாசா நகரில், அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட உலகளாவிய சக்தி யோகாலயா மையத்தின் திறப்பு விழா நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் கலந்துகொண்டு மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். சக்தி யோகாலயா நிறுவனர் இளையராஜா மற்றும் இயக்குனர் கவிதா ஆகியோர் காணொலி காட்சி மூலம் உரையாற்றியதாவது:
கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை உணவு, யோகா பயிற்சி மூலமாக வளர்த்து கொள்ள வேண்டும். அதற்கான நல்வாய்ப்பாக சக்தி யோகாலயா நோய் எதிர்ப்பு சக்தி யோகா முகாமை வரும் ஜூலை 12, ஞாயிறன்று நடத்த உள்ளது.
ஒன்றரை மணி நேர யோகா பயிற்சி வகுப்பு, சுகாதார வகுப்பறை மற்றும் சமூக இடைவெளியுடன் பொதுமக்கள், அனைவருக்கும் குறைந்த கட்டணத்தில் பயிற்சி அளிக்க உள்ளது. மேலும், இச்சமுதாயத்திற்கு தன்னலமின்றி சேவை செய்து வரும் முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் அனைவருக்கும் இவ்வகுப்புகள் இலவசமாக நடத்தப்படும். 0431 4210162, என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.