Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கடலூர் மத்திய சிறையில் 4 பேருக்கு கொரோனா

ஜுன் 22, 2020 01:03

கடலூர் : கடலூர் மத்திய சிறையில் தண்டனை கைதிகள் 4 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் கடலூர் மத்திய சிறையில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஏற்கனவே 5 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் மேலும் 4 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது.

தலைப்புச்செய்திகள்