![](admin/uploads/.5daff0816ddd80.78955078.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருப்பூர்: திருப்பூர் இந்து இளைஞர் முன்னணி சார்பாக லடாக் பகுதியில் நடைபெற்ற சண்டையில் இன்னுயிர் நீத்த இந்திய ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக சாமுண்டிபுரம் தனியார் மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்ததானம் செய்தனர்.
திருப்பூர் இந்து இளைஞர் முன்னணி சார்பாக லடாக் பகுதியில் நடைபெற்ற சண்டையில் இன்னுயிர் நீத்த இந்திய ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்த தானம் செய்தனர்.
இந்நிகழ்ச்சி மாநில நிர்வாக குழு உறுப்பினர் சண்முகம் மற்றும் மாவட்ட செயலாளர் மணிகண்டன் மேற்பார்வையில் நடைபெற்றது. இளைஞர் முன்னணி பொருப்பாளர் சுரேந்தர் தலைமை வகித்தார்.
நகர பொருப்பாளர்கள் அரவிந்த்,சுந்தர் உட்பட இளைஞர்கள் கலந்துகொண்டனர். 20 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது.