Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சுதேசி பொருட்களை அதிகமாக வாங்குங்கள்: அமித் ஷா மனைவி வேண்டுகோள்

ஜுன் 23, 2020 04:49

புதுடெல்லி : மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின், குடும்ப நல சங்க விழாவில் பங்கேற்ற, மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷாவின் மனைவி சோனல் ஷா, சுதேசி பொருட்களை வாங்குங்கள் என, வேண்டுகோள் விடுத்தார்.

நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவ படையான, சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின், குடும்ப நல சங்கத்தின் வெள்ளி விழா, நேற்று நடைபெற்றது.இதில், 'வெப் காமிரா' மூலம், மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷாவின் மனைவி சோனல் ஷா பங்கேற்றார்.

அப்போது, அவர் கூறியதாவது: நாட்டில், சுதேசி பொருட்களை பயன்படுத்த வேண்டும் என, பிரதமர், நரேந்திர மோடி அனைத்து தரப்பினருக்கும் அறிவுறுத்தி உள்ளார். அதனை பின்பற்றி, சி.ஆர்.பி.எப்., உள்ளிட்ட, மத்திய ஆயுத படை பிரிவினரின் குடும்பத்தினர், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, சுதேசி பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


கொரோனா பாதிப்பிற்கு மத்தியில், சுய உதவி குழுவினரை ஊக்குவிக்கும் வகையில், அவர்களின் தயாரிப்புகளுக்கு, முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.நாடு முழுவதும், 10 லட்சம் சி.ஆர்.பி.எப்., வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள், 50 லட்சம் பேரும், அவர்களுக்கான 'கேன்டீன்'களில், சுதேசி பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்ட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில், லடாக்கில், சீன ராணுவத்தினருடன் நடந்த மோதலில், வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு, அவர் அஞ்சலி செலுத்தினார்.

தலைப்புச்செய்திகள்