Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி ;''எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நேரத்தில், பிரதமர் மோடியை, சீனா பாராட்டுவது ஏன்' என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறிஉள்ளதாவது:சீன ராணுவம், நம் வீரர்கள், 20 பேரை கொன்றுள்ளது. நம் நிலப்பரப்பையும் ஆக்கிரமித்து விட்டது. இதுபோன்ற பதற்றமான,மோதல் போக்கு உடைய சூழலில், பிரதமர் மோடியை, சீன ஊடகங்கள் பாராட்டுவதன் மர்மம் என்ன என தெரியவில்லை. சமீபத்தில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில்,பிரதமர் மோடி பேசியதை, சீன ஊடகங்கள் புகழ்ந்து தள்ளியுள்ளன. இதற்கான காரணம் என்ன என புரியவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.