Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 64,603 ஆக உயர்வு: 833 பேர் பலி

ஜுன் 24, 2020 05:53

சென்னை: தமிழகத்தில் நேற்று (ஜூன் 23) ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 64,603 ஆகவும், பலி எண்ணிக்கை 833 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில்  மேலும் 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 38 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 64,603 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 87 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 23,148 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இதுவரையில் தமிழகத்தில் 9,44,352 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.

நேற்று சென்னையில் 21 பேரும், செங்கல்பட்டில் 4 பேரும், திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம் மற்றும் திருச்சியில் தலா 2 பேரும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருநெல்வேலி, மதுரை மற்றும் சேலத்தில் தலா ஒருவரும் என மொத்தம் 39 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 833 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய உயிரிழப்புகளில் 28 பேர் அரசு மருத்துவமனையிலும், 11 பேர் தனியார் மருத்துவமனையிலும் பலியாகியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 1,227 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 35,339 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 28,428 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்