Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குஜராத் தொழிற்சாலையில் தீ விபத்து: களத்தில் 25 தீயணைப்பு வாகனங்கள்

ஜுன் 24, 2020 08:47

காந்திநகர்: குஜராத்தில் சனந்த் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு தீயை அணைக்க தீவிரமாக முயற்சிகள் நடந்து வருகிறது. 

குஜராத்தின் அஹமதாபாத் பகுதியில் உள்ள சனந்த் பகுதி அதிக தொழிற்சாலை உள்ள இடம் ஆகும். கெமிக்கல் தொழிற்சாலை தொடங்கி எலக்ட்ரானிக் தொழிற்சாலைகள் வரை நிறைய நிறுவனங்கள் உள்ளது. குஜராத்தின் மிகவும் வளர்ச்சி அடைந்த பகுதிகளில் ஒன்றாகும்.

இந்நிலையில் குஜராத்தில் சனந்த் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு இருக்கும் ஜப்பான் தொழிற்சாலை ஒன்றில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பெரிய அளவில் சேதங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.
குஜராத் இண்டஸ்டிரியல் டெவலப்மென்ட் கார்ப்பரேசன் இந்த தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலை சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் தொழிற்சாலை என்கிறார்கள்.

இந்த விபத்தில் யாராவது பலியானார்களா? என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. அங்கு தீயை அணைக்க தீவிரமாக முயற்சிகள் நடந்து வருகிறது. 25 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்க தீவிரமாக முயன்று வருகிறார்கள். 
 

தலைப்புச்செய்திகள்