![](admin/uploads/.5fbb9b81245018.71463779.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருப்பூர்: சென்னையில் இருந்து விடுமுறையில் திருப்பூர் வந்த பெண் எஸ்.ஐ.,க்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, அவரது கணவர் பணியாற்றி வந்த திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேசன் மூடப்பட்டது.
சென்னையை சேர்ந்த பெண் போலீஸ் எஸ்.ஐ கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருப்பூர் வந்திருந்தார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரது கணவர் பணியாற்றி வந்த திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் தற்போது மூடப்பட்டது. போலீஸ் குடியிருப்பு, போலீஸ் கேண்டீன், பகுதி சீல் வைக்கப்பட்டது.
கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணி நடந்தது. மேலும், ஸ்டேஷன் போலீசார், குடியிருப்பில் உள்ளோருக்கு பரிசோதனை செய்ய உள்ளனர்.