Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மஹாராஷ்டிராவில் ஒரே நாளில் 5,493 பேருக்கு கொரோனா

ஜுன் 29, 2020 07:31

மும்பை: மஹாராஷ்டிராவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,493 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நாட்டில் அதிக கொரோனா பாதிப்புக்குள்ளான மாநிலமாக மஹாராஷ்டிரா உள்ளது. நேற்று முன்தினம் அங்கு 5,318 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று (ஜூன் 28) புதிதாக 5,493 பேருக்கு கொரோனா உறுதியாகி புதிய உச்சத்தை தொட்டது. இதனையடுத்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு 1,64,626 ஆக அதிகரித்தது.

நேற்று மட்டும் 156 பேர் பலியாகினர். 2,330 பேர் குணமாகினர்; 86,575 பேர் இதுவரை குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 70,067 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்