![](admin/uploads/.60140593a95669.29276979.jpg)
Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி: மதுரை மாவட்டம் மேலவளவு படுகொலை சம்பவத்தில் உயிர்நீத்தவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே மேலவளைவு பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றவர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் பதவி ஏற்க கூடாது என்பது தொடர்பாக 1997-ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி நடந்த கலவரத்தில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயிர் நீத்தவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. பின்பு கைகளில் மெழுகுதிரி ஏந்தி உயிர் நீத்தவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் அச்சு ஊடகத்துறை மாநில துணை செயலாளர் ரமேஷ் குமார் மாநில துணைச் செயலாளர் பிரபாகரன் இளம் சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாநில துணைச்செயலாளர் அரசு தொகுதி செயலாளர் கனியமுதன் ஆல்பர்ட் ராஜ் டி.எம்.எஸ். முருகன் ஷாஜகான் வழக்கறிஞர்கள் பழனியப்பன் தீனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.