Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கும்பகோணம்: கும்பகோணம் ஒன்றியம், கொத்தங்குடி ஊராட்சி, தட்டுமால் கிராமத்தில் கொரோனா வைரஸால் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டு தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் தட்டுமால் கிராமம் கீழத்தெரு பகுதியை தனிமைப்படுத்தப்பட்ட காரணத்தால் அங்கு வாழும் குடும்பங்கள் வருவாய் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து வருவாய் இன்றி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரிசி, காய்கறி அடங்கிய தொகுப்பு பையை அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் சோழபுரம் அறிவழகன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கொத்தங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜலட்சுமி வீரபாண்டியன், கூட்டுறவு சங்க தலைவர் சிவக்குமார், அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி செயலாளர் செந்தில், ஒன்றிய கவுன்சிலர் சித்ரா பரமசிவம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஐயப்பன், ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜா, ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் சிங்காரவேலு, மாணிக்கம், ரபேல்ராஜ், கிளை செயலாளர்கள், ஊராட்சி செயலாளர் வீரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.