![](admin/uploads/.62639097992701.55123234.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: அறம் மக்கள் நலச்சங்கத்தின் தலைவர் டாக்டர் சு.ராஜா, தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் முன்னிலையில் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார்.
தமிழகம் முழுவதும் சுமார் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது அறம் மக்கள் நலச்சங்கம். ஏழை, எளிய மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்வதோடு, மாணவர்களின் கல்விக்காகவும் பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறது.
இந்த சங்கத்தின் நிறுவன தலைவரான டாக்டர் சு.ராஜா, சென்னையில் பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் முன்னிலையில் தன்னை பா.ஜ.கவில் இணைத்துக் கொண்டார். இதுகுறித்து அவர் கூறும்போது, பாரத பிரதமராக மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல்வேறு முக்கியத்துபம் வாய்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது நாட்டை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்று பிரச்சனை மட்டுமல்லாது, மக்களுக்கு ஏற்படும் பல இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்தும் மக்களை காத்து, பிரச்சனைகளை சரி செய்வதில் பிரதமர் மோடிக்கு நிகர் யாருமே கிடையாது. பிரதமர் மோடியின் செயல்பாடுகளை உலக நாடுகள் அனைத்தும் பாராட்டி உள்ளது.
பிரதமர் மோடியின் பல்வேறு சிறப்பான செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டுதான் பா.ஜ.க.வில் தான் இணைந்துள்ளே என்று டாக்டர் சு.ராஜா தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியின்போது அறம் தொலைக்காட்சி சி.இ.ஓ. ஸ்ரீதர், பாடலாசிரியர் பா.விஜய், நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார், கலை, ஜனனி பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.