Saturday, 28th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: .கொரோனா விவகாரத்தில் சிறுபிள்ளைத்தனமாக நடக்கக்கூடாது என சுகாதாரதுறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை போரூரில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஊரடங்கு தளர்வவு காலத்திலும் பொது இடங்களில் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.கொரோனா விவகாரத்தில் முன்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிறுபிள்ளைத்தனமாக நடக்கக்கூடாது. நாளை முதல் மக்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் 13 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மூலம் பலர் குணமடைந்துள்ளனர். இதுவரை 8 லட்சம் பேர் மருத்துவ முகாம்களில் பங்கேற்றுள்ளனர். சென்னையில் உள்ள 39,590 தெருக்களில் தொற்று பாதித்த தெருக்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரமாக குறைந்துள்ளது என அவர் கூறினார்.