Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மருத்துவ சேவை வழங்கும் திருநங்கைக்கு பாராட்டு

ஜுலை 05, 2020 09:55

புதுடில்லி; நாட்டிலேயே, முதன் முறையாக, ஜோயா கான் என்ற திருநங்கை, பொது சேவை மையம் மூலம், தொலை மருத்துவ சேவை வழங்கி வருவதற்கு, மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர், ரவிசங்கர் பிரசாத் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

ஜோயா கான் உடன் எடுத்த படங்களை, 'டுவிட்டரில்' பதிவேற்றி ரவிசங்கர் பிரசாத் கூறியிருப்பதாவது:குஜராத் மாநிலம், வதோதரா மாவட்டத்தில், ஜோயா கான் என்ற திருநங்கை, பொது சேவை மையம் மூலம், தொலை துார மருத்துவ சேவையை துவக்கியுள்ளார். இந்தியாவில், முதன் முறையாக, திருநங்கை ஒருவர் இத்தகைய சேவையில் ஈடுபட்டு உள்ளார். 

அவர், திருநங்கையர் சமூகத்திற்கு, 'டிஜிட்டல்' கல்வியறிவை வழங்கவும், சிறப்பான வாய்ப்புகளை அளிக்கவும், இத்தகைய சேவையில் இறங்கியுள்ளதை பாராட்டுகிறேன்.கொரோனாவால், வர்த்தக நடவடிக்கைகள் மந்தமடைந்துள்ளன; வேலைவாய்ப்பு பிரச்னைகள் எழுந்துள்ளன. இந்நிலையில், ஜோயா கான், தொழில் முனைவோருக்கு உந்துதலை அளிக்கும் வழிகாட்டியாக உருவெடுத்து உள்ளார் என  அவர் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்