Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அடுத்த பிரதமர் ராகுல்: சித்தராமைய்யா

மார்ச் 16, 2019 06:48

பெங்களூரு : நாட்டின் அடுத்த பிரதமரான ராகுல் கர்நாடகாவில் போட்டியிட வேண்டும் என காங்., தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமைய்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

காங்., தலைவர் ராகுல் தலைமையில் மத்தியில் புதிய ஆட்சி அமைய உள்ளதாகவும், ராகுல் தான் அடுத்த பிரதமர் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்கனவே கூறி வருகிறார்.  
இதனையடுத்து வரும் லோக்சபா தேர்தலில் ராகுல், தமிழகத்தின் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என காங் மற்றும் திமுக.,வினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் ராகுல், கர்நாடகாவில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என சித்தராமைய்யா, ராகுலுக்கு கோரிக்கை வைத்துள்ளார். 

இது தொடர்பாக சித்தராமைய்யா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்திய தலைவர்களை கர்நாடகா எப்போதும் ஆதரித்துள்ளது. 1978 ல் இந்திரா சிக்மகளூர் தொகுதியிலும், 1999 ல் சோனியா பெல்லாரி தொகுதியிலும் போட்டியிட்டு, தங்களின் பலத்தை நிரூபித்துள்ளனர்.  
நமது அடுத்த பிரதமரான ராகுலும் கர்நாடகாவின் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என விரும்புகிறோம். இந்த கோரிக்கையை ராகுல் பரிசீலிக்க வேண்டும். தென்னிந்தியாவில் எங்களின் பிரதிநிதியாக அவர் இருக்க வேண்டும். அதற்காக அவர் கர்நாடகாவை தேர்வு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்