Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோடை விடுமுறை 50 நாட்களாக அதிகரிப்பு

மார்ச் 16, 2019 06:59

சென்னை: பள்ளிகளுக்கு கோடை விடுமுறை 50 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 1 முதல் 9 ம் வகுப்புகளுக்கு 3 ம் பருவ தேர்வுகள் ஏப்ரல் 13 ம் தேதியுடன் முடிவடைகிறது. ஏப்ரல் 14 ம் தேதி முதல் கோடை விடுமுறை துவங்குகிறது.  
லோக்சபா தேர்தலை முன்னிட்டு இந்த ஆண்டு கோடை விடுமுறை 50 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 50 நாட்கள் கோடை விடுமுறைக்கு பிறகு, மீண்டும் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும். பள்ளிகள் திறக்கப்படும் அன்றே புதிய பாடத்திட்டத்திற்கான பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்