Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு செப்டம்பர் மாதம் தண்ணீர் திறக்க வாய்ப்பு : ஆந்திர அதிகாரிகள் தகவல்

ஜுலை 08, 2020 09:16

திருச்சி: கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு செப்டம்பர் மாதம் தண்ணீர் திறக்க வாய்ப்பு இருப்பதாக ஆந்திர அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு ஆண்டு தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும். கண்டலேறு அணையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் கிருஷ்ணா நதி கால்வாயில் ஏற்பட்ட உடைப்புகளை சீரமைக்க கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி தண்ணீர் நிறுத்தப்பட்டு 25-ந் தேதி மீண்டும் பூண்டி ஏரிக்கு திறக்கப்பட்டது.

இந்த நிலையில் தண்ணீர் கடந்த மாதம் 24-ந் தேதி நிறுத்தப்பட்டது. செப்டம்பர் மாதம் 25-ந் தேதி முதல் கடந்த மாதம் 24-ந்தேதி வரை பூண்டி ஏரிக்கு 8.040 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்தது. கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி இம்மாதம் முதல் வாரத்தில் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் எதிர்பார்த்தனர்.

ஆனால் பருவமழை தொடங்க உள்ளதையும் ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா நதி கால்வாயை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை கருத்தில் கொண்டு பூண்டி ஏரிக்கு செப்டம்பர் மாதம் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக ஆந்திர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பூண்டி ஏரியில் நீர் மட்டம் 18.92 அடியாக பதிவானது. வெறும் 225 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 140 கனஅடி வீதமும் சென்னை குடிநீர் வாரியத்துக்கு 10 கனஅடி வீதமும் தண்ணீர் அனுப்பபடுகிறது.

தலைப்புச்செய்திகள்