![](admin/uploads/.5d1ed3968b9764.39223830.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: அமைச்சர் தங்கமணிக்கு, கொரோனா தொற்று உறு தியானதை தொடர்ந்து, முதல்வருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப் பட்டதாக, தகவல் வெளி யாகி உள்ளது.
தலைமை செயலகத் தில், இம்மாதம், 7ம் தேதி, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின், இணையதள துவக்க விழா நடந்தது. இந்த விழாவில், முதல்வருடன், மின் துறை அமைச்சர், தங்கமணி பங்கேற்றார்.
மறுநாள் அமைச்சர் தங்கமணிக்கு, கொரோனா தொற்று இருப் பது உறுதி யானது. அவரது மகன், கார் டிரை வர் மற்றும் உதவியாளர் களுக்கும், கொரோனா தொற்று பாதித் துள்ளது. அதைத் தொடர்ந்து, முதல்வருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள் ளப்பட்டதாக, தகவல் வெளியானது.
இதுகுறித்து, முதல்வர் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், ‘முதல்வருக்கு அவ்வப்போது, பரிசோதனை மேற் கொள்ளப்படுகிறது. முதல்வர் அலு வலக ஊழியர்களுக்கு, 10 நாட்களுக்கு ஒரு முறை, பரிசோதனை நடத்தப் படுகிறது’ என்றனர்.