Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

10 லட்சம் கையெறி குண்டுகள் வாங்க திட்டம்

மார்ச் 16, 2019 07:22

புதுடில்லி:10 லட்சம் கையெறி குண்டுகளை வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
காஷ்மீரின் புல்வாமா தாக்குதலை அடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பல்வகைப் பயன்பாடுகளுக்கு உதவும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் 10 லட்சம் கையெறி குண்டுகளை வாங்க இந்திய பாதுகாப்புத்துறைஅமைச்சகம் திட்டமிட்டுள்ளதாகவும், ரூ.500 கோடி மதிப்பில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இது தொடர்பாக மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் ஆலோசிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தலைப்புச்செய்திகள்