Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எல்பின் அலுவலகத்தில் காமராஜரின்பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

ஜுலை 15, 2020 05:27

திருச்சி: கர்மவீரர் காமராஜர் அவர்களின் 118 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அறம் மக்கள் நல சங்கம் நிறுவனரும், தலைவருமான டாக்டர் சு.ராஜா திருச்சி மன்னார்புரத்திலுள்ள எல்பின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த காமராஜர் புகைப்படத்திற்கு மலர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் சாகுல் அமீது, மாநில பொருளாளர் ஐ.பாபு, மாநில அமைப்பு செயலாளர் பாதுஷா, மாநில துணைத்தலைவர் இளங்கோ  மற்றும் அறம் மக்கள் நலச்சங்கம் மற்றும் எல்பின் குடும்பத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கர்மவீரர் காமராஜர் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் கர்மவீரர் காமராஜர் குறித்து அவரது சாதனைகள் குறித்து விளக்கி பேசினர்.

காமராஜர் சிலைக்கு மரியாதை:

அறம் மக்கள் நல சங்கத்தின் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளையொட்டி திருச்சியில் உள்ள காமராஜர் உருவச்சிலைக்கு மாநில பொதுச்செயலாளர் சு.ரமேஷ் குமார் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மாநில அமைப்பு செயலாளர் பாதுஷா, மாநில துணை செயலாளர்கள், பிரபாகரன், தங்கதுரை  மாநகர் மாவட்ட தலைவர் ஆனந்த், துணைத்தலைவர் இளங்கோ, தெற்கு மாவட்ட துணை தலைவர் வினோத்குமார், மகளிரணி தலைவி நிர்மலா  உள்பட பலர் உடனிருந்தனர்.

தலைப்புச்செய்திகள்