Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருநெல்வேலி: மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்கக் கோரி, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையரிடம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் தமிழ்நாட்டில், மதநல்லிணக்கம், மனித நேயம், ஒருமைப்பாடு போன்றவற்றை, சீர்குலைத்து வரும், கல்யாணராமன், சிவனடியான் மவுண்ட் கோபால் ஆகியோர் மீது, பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி, திருநெல்வேலி மாவட்ட, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில், மாநகர காவல் ஆணையர் தீபக் எம்.டாமோரிடம் கட்சியின் மாவட்டத் தலைவர் ரசூல்மைதீன் தலைமையில், மாவட்டச் செயலாளர் அலிப் பிலால், மனிதநேய மக்கள் கட்சியின், மாவட்டச் செயலாளர் டவுண் ஜமால் மாவட்டப் பொருளாளர் சேக், மாவட்டத் துணைச் செயலாளர்கள் ரசூல்மைதீன், முகம்மது யாசிர், மருத்துவ சேவை அணி மாவட்டச் செயலாளர் யூசுப் சுல்தான் ஆகியோர் தனித்தனியாக, புகார் மனுக்களை அளித்தனர்.
புகார்களைப் பெற்றுக் கொண்ட, மாநகர காவல் ஆணையர் இது தொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, உறுதி அளித்தார்.