![](admin/uploads/.5e3fddf8252c72.15598441.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நெல்லை: லோக்சபா தேர்தலில் பாதுகாப்பு பணிகளுக்காக துணை ராணுவம் தமிழகத்திற்கு வருகிறது. முதல் கட்டமாக 6 கம்பெனி படைகள் சென்னை (4), சேலம்(1) ,திருப்பூர்(1) என நேற்று வந்தது. அடுத்தகட்டமாக இன்று (மார்ச் 16) துணை ராணுவம் திருநெல்வேலிக்கு வந்தனர்.
தேர்தலில் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்கவும் , தேர்தலை அமைதியான முறையில் நடத்தவும் துணை ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கும் துணை ராணுவம் வரும் என்று கூறப்படுகிறது.