Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பட்டபகலில் முகமூடி கொள்ளை

மார்ச் 16, 2019 08:36

ஆத்தூர் : சேலம் ஆத்தூரில் முகமூடி அணிந்த நபர்கள் 2 பேர் பகலில் மரவள்ளி கிழங்கு அலுவலகத்தில் ரூ.3.30 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.  
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த புதுப்பேட்டையில் மரவள்ளி கிழங்கு புரோக்கர் அலுவலகம் உள்ளது. இன்று காலையில் இருவர் கிழங்கின் விலை கேட்டு அலுவலகம் உள்ளே வந்து நோட்டமிட்டனர். பின் முகமூடி அணிந்து மேஜேனர் ஷேக் தாவுத்தை கட்டிப்போட்டனர். 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை கொள்ளை அடித்துச் சென்றனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்