Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கருணாநிதி பெயரில் மாணர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் அறிமுகம்

ஜுலை 20, 2020 09:38

புதுச்சேரி: கருணாநிதி பெயரில் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் நாராயணசாமி அறிவித்தார்.

புதுச்சேரி சட்டசபையில் நேற்று முதல்வர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய முதல்வர் நாராயணசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், புதுச்சேரியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், இலவச குடிநீர், கருணாநிதி பெயரில் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம். நவம்பர் 15ம்தேதி முதல் காலை உணவாக இட்லி, கிச்சடி, பொங்கல் வழங்கப்படும். 

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் கல்லூரி கட்டணம் ரத்து. அனைத்து கல்லூரி கட்டணத்தையும் ரத்து செய்வதுடன் கல்லூரியில் சேர இலவசமாக விண்ணப்பம் வழங்கப்படும்.  ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்துக்காக ரேசன் கடைகள் புத்தாக்கம் செய்யப்படும். 
இவ்வாறு முதல்வர் நாராயணசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். 
 

தலைப்புச்செய்திகள்