Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று

ஜுலை 21, 2020 06:23

சென்னை; தமிழக சுகாதாரத்தறை செயலர் ராதாகிருஷ்ணனின் மனைவி மகன் உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கொரோனா தடுப்பு பணிகளில் மும்முரமாக பணியாற்றி வருகிறார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக செல்வதால் வீட்டிற்கு போகாமல் அரசினர் விடுதியில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் மதுரையில் இருந்து அவரது மாமனார் மற்றும் மாமியார் சென்னை வந்துள்ளனர். முறைப்படி அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.அவர்களுடன் தொடர்பில் இருந்த ராதாகிருஷ்ணனின் மனைவி, மகனுக்கு பரிசோதனை நடந்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் நால்வரும் சென்னை கிங்ஸ் ஆய்வு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செயலர் ராதாகிருஷ்ணனுக்கும் பரிசோதனை நடந்தது. அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை.

தலைப்புச்செய்திகள்