![](admin/uploads/.60cae4b8bf6c06.61297585.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: தமிழகத்தில் அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறி மாநிலம் முழுவதும் தி.மு.க., சார்பில் போராட்டம் நடந்தது. மின்கட்டண குழப்பங்களை நீக்கவும், கட்டண சலுகை வலியுறுத்தியும் போராட்டம் நடந்தது.
வீடுகளின் முன்பு கறுப்புக்கொடி ஏந்தியும், கண்டன முழக்கங்களுடனும் போராட்டம் நடந்தது. சென்னை, ஆழ்வார்ப்பேட்டையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கறுப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த போராட்டம் தொடர்பாக தி.மு.க., எம்.பி., கனிமொழி கூறுகையில், மின்கட்டண விவகாரத்தில் தி.மு.க., குழப்பவும் இல்லை. அரசியலும் செய்யவில்லை. மின்கட்டணம் எவ்வளவு வந்திருக்கிறது என ஒவ்வொரு குடும்பத்திற்கும் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.