Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவை, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ஜுலை 23, 2020 07:28

சென்னை : கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி மாவட்டங்களில், ஒரு சில இடங்களில், அடுத்த, 24 மணி நேரத்தில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் வட கடலோர பகுதிகள், புதுவை, காரைக்கால், சென்னை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், லேசானது முதல், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.இதே போன்று, கன்னியாகுமரி, தென்காசி, கிருஷ்ணகிரி, சேலம், வேலுார், நாமக்கல், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மாலத்தீவு, லட்சத்தீவு, தெற்கு கேரளா, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், மணிக்கு, 50 கி.மீ., வரை சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என, அறிவுறுத்தப்படுகின்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை, 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்