Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுச்சேரியில் கொரோனா தொற்றுக்கு உயரிழப்போர் குடும்பங்களுக்கு ரூ. 1 லட்சம் நிவாரணம்: நாராயணசாமி

ஜுலை 23, 2020 03:04

புதுச்சேரி: கொரோனாவால் உயிரிழப்போர் குடும்பத்தினருக்கு ரூ 1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் நாராயணசாமி, ' புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக இதுவரை ஒன்பது கோடியே 16 லட்சம் வந்துள்ளது, மேலும் கட்டுப்படுத்தப் பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு தலா ரூ 700 மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் நிதியுதவி வழங்கப்படும்' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இதுவரை 2,421 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். சிகிச்சை பலனின்றி உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உள்ளது.

தலைப்புச்செய்திகள்