Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேற்குவங்கத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க மம்தா வியூகம்: கட்சியில் மிகப்பெரிய மாற்றம்

ஜுலை 24, 2020 06:00

கோல்கத்தா: அடுத்தாண்டு சட்டசபை தேர்தலை எதிர் நோக்கி ஆளும் திரிணாமுல் காங். கட்சியில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுத்த முதல்வர் மம்தா திட்டமிட்டு அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி கட்சியில் இள ரத்தம் பாய்ச்சும் விதமாக மாநிலத்தில் ஹவுரா, கூச்பெஹார், புருலியா, நாடியா, ஜக்ராம், தெற்கு தினாஜ்பூர், ஆகிய மாவட்டங்களில் தலைவர் பதவியில் இளைஞர்களுக்கு கட்சியில் உரிய அங்கீகாரம் கொடுக்க முடிவு செய்து இளம் தலைவர்கள் பெயரை அறிவித்தார்.

பின்னர் கட்சியின் அமைப்பு ரீதியாக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, 2021-ம் ஆண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க புது வியூகம் வகுத்து வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தலைப்புச்செய்திகள்