Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊட்டியில் இருவரால் 220 பேருக்கு கொரோனா பரவல்

ஜுலை 24, 2020 06:34

ஊட்டி; மஞ்சூர் அருகே, இருவரால் மட்டும், 220 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.மஞ்சூர் அருகே தங்காடு ஓரநள்ளி கிராமத்தில், திருமண நிகழ்ச்சி நடந்தது. விதிகளை மீறி அதிகம் பேர் பங்கேற்றுள்ளனர்.

அதில், பெங்களூரிலிருந்து வந்த இளைஞரால், தொற்று பரவியுள்ளது.நிகழ்ச்சிக்கு பின், காய்ச்சல், சளியால் சிலர் பாதிக்கப்பட்டதை அடுத்து, மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற போது, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சுகாதார துறையினர் ஆய்வு மேற்கொண்டு, தொடர்புடைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களின் மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தினர். அந்த நிகழ்ச்சியால் மட்டும் இதுவரை, 105 பேருக்கு தொற்று பரவியது.

அதே போல், எல்லநள்ளி ஊசி தொழிற்சாலையில் மக்கள் தொடர்பு அலுவலரால் தொற்று ஏற்பட்டது. அங்கு பணிபுரியும், 750 ஊழியர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதில். 115 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்த இரண்டு அலட்சிய சம்பவத்தால், மொத்தம், 220 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதில், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில், 140 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.

தலைப்புச்செய்திகள்