![](admin/uploads/.5f6c480e4a2ed5.30935709.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கடலூர்: ராமநத்தம் அருகே சொத்து தகராறில் தச்சு தொழிலாளியை அரிவாளால் வெட்டி கொலை செய்த அண்ணனை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த ஆவட்டியை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இரவது மகன்கள் சாமிநாதன்(70) குழந்தைவேலு(60). இருவரும் தச்சு தொழிலாளிகள். இவர்களுக்கு இடையே சொத்து பிரச்சினை உள்ளது. இந்த நிலையில் சாமிநாதன் பெங்களூருவில் தங்கி தச்சு வேலை செய்து வந்தார். அங்கு அவரது மனைவியை வெட்டி கொலை செய்தார். தற்போது அவர் சொந்த ஊரான ஆவட்டிக்கு வந்திருந்தார்.
சாமிநாதன் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது அங்கிருந்த குழந்தைவேலுவிடம் தகராறில் ஈடுபட்டு அவரை அரிவாளால் வெட்டினார். மேலும் இதை தடுக்க வந்த குழந்தைவேலுவின் மனைவி கோகிலா(48)வையும் அவர் வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே குழந்தைவேலு உயிரிழந்தார். படுகாயமடைந்த கோகிலா திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சம்பவம் பற்றி அறிந்த ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் கொலை செய்த சாமி நாதன் அங்குள்ள தனது வீட்டுக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டி கொண்டு இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து சாமிநாதனை சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் குழந்தைவேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட குழந்தைவேலுக்கு 2 மகன் 2 மகள்கள் உள்ளனர். இதில் ஒரு மகளுக்கு மட்டும் திருமணமாகவில்லை.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.