Saturday, 28th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு தமிழகத்தின் பல இடங்களில் திருவுருவ சிலை அமைக்கப்படும் என பாஜகவின் கல்வியாளர் பிரிவின் மாநிலத் துணைத் தலைவர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:
இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவரும், பாஜகவின் மூத்த தலைவராகவும் இருந்தவர் முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாய். சுதந்திரபோராட்டம் துவங்கி அரசியல் வாழ்க்கையிலும் தன் பெயரை முத்திரையாக பதித்திட்டவர் வாஜ்பாய்.
இந்தியாவின் 50 ஆண்டுகாலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை பெற்றவர். அவருக்கு தமிழகத்தின் பல இடங்களிலும் சிலை அமைக்க முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். என பாஜகவின் கல்வியாளர் பிரிவின் மாநிலத் துணைத் தலைவர் வெங்கடேசன் கூறினார்.