![](admin/uploads/.6066c3055cdaa6.35370566.jpg)
Sunday, 7th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஐதராபாத்: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான, மறைந்த நரசிம்ம ராவின், 100வது பிறந்த தினத்தை, இந்தாண்டு முழுதும் கொண்டாட, அவரது சொந்த மாநிலமான தெலுங்கானா காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
இதையொட்டி, காங்கிரஸ் தலைவர் சோனியா, தெலுங்கானா மாநில காங்கிரசுக்கு அனுப்பியுள்ள செய்தியில், 'அர்ப்பணிப்பு மிக்க காங்கிரஸ் பிரமுகராக செயல்பட்டவர் நரசிம்ம ராவ். அவரது ஆட்சி காலத்தில் தான், சமூக மற்றும் பொருளாதார ரீதியிலான புதிய கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன' என, தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும், நரசிம்ம ராவுக்கு புகழாரம் சூட்டி, வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளனர்.