Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நெல்லை, தூத்துக்குடியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜுலை 26, 2020 06:08

திருநெல்வேலி: நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 212 பேருக்கு தொற்று உறுதியானது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த 55 வயதான பத்திரிகையாளர் ஒருவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இறந்தார். இன்றும் இருவர் இறந்தனர். மேலும் இருவர் இறந்தனர். வைராவிகுளம், அகஸ்தியர்பட்டி ஆரம்பசுகாதார நிலையங்களில் நர்ஸ் உள்ளிட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

பேட்டையில் மின்வாரியத்தில் ஒருவருக்கு பாதிப்பால் அலுவலகம் மூடப்பட்டது. இன்று 207 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.மாவட்டத்தில் தற்போது 1458 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
துாத்துக்குடியிலும் கொரோனா தொற்று வேகமாக பரவிவருகிறது.இன்று 317 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஒருவர் இறந்தார்.307 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தற்போது 2366 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தென்காசியில் இன்று 99 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. ஒருவர் பலியானார். 387 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 760 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்