Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பா.ஜனதா வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு

மார்ச் 18, 2019 05:26

சென்னை: தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் கன்னியாகுமரி, சிவகங்கை ஆகிய 2 தொகுதிகளிலும் காங்கிரசுடன் நேரடியாக மோதுகிறது. 

கூட்டணி கட்சியான அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. தேசிய கட்சியான பா.ஜனதா வேட்பாளர்களை டெல்லி மேலிடம்தான் அறிவிக்கும். 

எனவே தமிழகத்தில் பா.ஜனதா போட்டியிட உள்ள கன்னியாகுமரி, தூத்துக்குடி, சிவகங்கை, கோவை, ராமநாதபுரம் ஆகிய 5 தொகுதிகளிலும் போட்டியிட தகுதியான வேட்பாளர்கள் பெயர் பட்டியலை தமிழக நிர்வாகிகள் தயாரித்துள்ளனர். 

இந்த பட்டியலுடன் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு கட்சி தலைவர் அமித்ஷாவிடம் பட்டியலை ஒப்படைக்கிறார். கட்சி மேலிடம் பரிசீலித்து நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பட்டியலை வெளியிடாவிட்டாலும் பெரும்பாலான தொகுதிகளில் தேர்தல் பணியை தொடங்கிவிட்டார்கள். கன்னியாகுமரியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன், சிவகங்கையில் எச்.ராஜா ஆகியோருக்கு சீட் வழங்கப்படும் என்று தெரிகிறது. 

தூத்துக்குடியில் தமிழிசை, ராமநாதபுரத்தில் நயினார்நாகேந்திரன் அல்லது குப்புராம் நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது. இதுபற்றி தமிழிசையிடம் கேட்டபோது கட்சி அதிகாரப் பூர்வமாக எப்போது யாரை அறிவிக்கிறதோ அதன்பிறகு தான் வேட்பாளர் யார் என்பது உறுதியாக தெரியும் என்றார்.

தலைப்புச்செய்திகள்