Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி மீது ராகுலுக்கு நம்பிக்கையில்லை?

ஜுலை 27, 2020 06:53

புதுடெல்லி: சென்னையில் தமிழக காங்கிரஸ் அலுவலகமான சத்திய மூர்த்தி பவன் மற்றும் தேனாம்பேட்டையில் கட்சிக்கு சொந்தமான இடம் தொடர்பாக பரபரப்பான செய்திகள் அடிபடுகின்றன. இந்த இடங்களில், மாபெரும் வளாகம் கட்ட, ராகுல் ஆசைப்படுகிறார் என, சொல்லப்படுகிறது.

இந்த விவகாரத்தில் ஊழல் நடக்கிறது என்கின்றனர், சில காங்கிரசார். சமீபத்தில் இது தொடர்பாக, ஒரு பிரபல ஆடிட்டர், 'டுவிட்' செய்து, பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு தமிழக காங்., தலைவர், மறுப்பும் தெரிவித்தார்.

இந்த விஷயம், ராகுலை பெரிதும் பாதித்துள்ளதாம். காங்கிரசைச் சேர்ந்தவரும், தமிழக காங்., டிரஸ்ட்டின் அங்கத்தினருமான ஒருவர் தான், அந்த ஆடிட்டரைச் சந்தித்து, உள் விவகாரங்களைப் போட்டுக் கொடுத்துவிட்டார் என, சந்தேகிப்பதோடு, அவர் மீது கோபமாகவும் இருக்கிறாராம் ராகுல்.

சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் எப்படி வெளியானது; இதன் பின்னணியில் இருப்பது யார்' என்பது குறித்து விசாரிக்குமாறு, தன் அந்தரங்க ஆலோசகரான, கனிஷ்க் சிங்கிற்கு உத்தரவிட்டுள்ளாராம், ராகுல். இதிலிருந்து தமிழக காங்., தலைவர் அழகிரி மீது, ராகுலுக்கு நம்பிக்கையில்லை என தெரிகிறது என பேச ஆரம்பித்துவிட்டது, அழகிரியின் எதிர் கோஷ்டி.

தலைப்புச்செய்திகள்