![](admin/uploads/.628636f7299c62.93740121.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பெங்களூரூ: கர்நாடகாவில் ஒரே நாளில் 1,847 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்.
இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,685 ஆக உயர்ந்தது. இன்றைய தேதியில் மொத்தம் 61,819 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சை பெற்று வருவோரில் 598 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 5,324 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அங்கு கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,01465 ஆக உயர்ந்தது. ஒரே நாளில் மேலும் 75 பேர் கொரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 1,935 ஆக உயர்ந்தது.
பெங்களூருவில் மட்டும் கடந்த 24 மணிநேரத்தில் 1,470 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். நகரில் 33,816 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இது மாநிலத்தின் மொத்த பாதிப்பில் 50 சதவீதத்திற்கும் மேலாக உள்ளது.