Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எஸ்.ஐ. தானே சுட்டு கொண்டது ஏன்?: சென்னை மாநகரில் பரபரப்பு சம்பவம்

ஜுலை 28, 2020 07:03

சென்னை: நெற்றிப் பொட்டில் வைத்து கொண்டு எஸ்.ஐ. சேகர் தன்னை தானே சுட்டுகொண்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி இன்னும் சென்னையை விட்டு போகவில்லை. எதற்காக சேகர் தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணமும் தற்போது வெளியாகி உள்ளது.

சென்னை தியாகராய நகர் ராமானுஜம் தெருவில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினுடைய மாநில தலைமை அலுவலகம் உள்ளது.. இதற்கு வேதாந்தம் என்பவர் தலைவராக உள்ளார்.
இவருக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர்தான் எஸ்.ஐ. சேகர். ஸ்பெஷல் எஸ்.ஐ. இவர். 47 வயதாகிறது. வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்தவர். கல்யாணமாகி 13 வயதில் ஒரு மகன், 14 வயதில் ஒரு மகள் உள்ளனர்..

இங்கு 2 வருஷமாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் திடீரென இவர் தன்னுடைய துப்பாக்கியை எடுத்து தன்னை தானே சுட்டு கொண்டார். நெற்றியில் குறி வைத்து இவர் சுட்டு கொண்டதில், அப்போதே, அங்கேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இந்த துப்பாக்கி சத்தம் கேட்டுதான் அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர்.

அங்கிருந்த ஊழியர்கள் அலறி துடித்தனர். உடனடியாக மாம்பலம் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட, அவர்களும் விரைந்து வந்தனர். இங்கு பணியில் ஈடுபடும் போலீஸார் தங்குவதற்காகவே இந்த ஆபீசுக்கு பின்பக்கம் ஒரு ரூம் உள்ளதாம். யார் டியூட்டியில் இருந்தாலும் இங்குதான் இந்த ரூமில்தான் தங்குவார்கள்.

அப்படித்தான் நேற்றுமுன்தினம் மாலை சேகரும் 5 மணியளவில் ரூமில் ரெஸ்ட் எடுத்து கொண்டிருந்தார். போலீசார் விரைந்து வந்து சேகரின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு விசாரணையை ஆரம்பித்தனர்.

சேகர் சுட்டு கொண்ட, அந்த துப்பாக்கியை கைப்பற்றினர். தற்கொலைக்கு முன்பு சேகர் ஒரு லெட்டர் எழுதி வைத்துள்ளார். அதில் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். வீடு கட்ட 25 லட்சம் கடன் வாங்கினாராம், அதை திருப்பி தராமல் போய்விடுவோமோ என்று பயந்து கொண்டே தற்கொலை செய்துள்ளார்.

இந்த கடிதத்தின் அடிப்படையில் மாம்பலம் போலீஸார் விசாரணையை துவக்கி உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்