Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோகுல மக்கள் கட்சி அஇஅதிமுக கூட்டணிக்கு ஆதரவு

மார்ச் 18, 2019 06:11

சென்னை: 2019-ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமையில் அமைந்துள்ள மெகா கூட்டணியில் கோகுல மக்கள் கட்சி தன்னுடைய ஆதரவை தெரிவித்தும், எதிர்காலத்தில் ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு இருக்கின்ற மக்களுக்கு அரசியல் அங்கீகாரம் பெற்றுத் தருவதற்காகவும், பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வாதார கோரிக்கையான சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு பெறுவதற்கும் தகுதியான கூட்டணி அ.இ.அ.தி.மு.க. கூட்டணி என கருதி இந்த கூட்டணியை கோகுல மக்கள் கட்சி நிர்வாகக்குழு முழுமனதுடனும், ஒற்றுமையுடனும் ஆதரித்து தமிழகம் முழுவதும் இந்த அணி வெற்றி பெற பாடுபட வேண்டும்  

என்று ஒருமனதாக முடிவெடுத்து இன்று கோகுல மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமிகு எம்.வி. சேகர் அவர்கள் தலைமையில் 50க்கும் மேற்பட்ட கோ.ம.க.நிர்வாகிகள் ஒன்றுகூடி மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் எடப்பாடி.கே.பழனிசாமி அவர்களையும் மாண்புமிகு துணை முதல்வர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களையும் சந்தித்து கோகுலம் மக்கள் கட்சியின் முழு ஆதரவினை தெரிவித்த போது எடுத்த படம். 

உடன் ஆர். மண்ணு பிள்ளை,திருமதி காந்திமதி மண்ணைப் பிள்ளை, மாவட்ட செயலாளர்கள் திருமதி. சக்தி பாலா யாதவ்,எம்.கிருஷ்ணன்,எம்.மோகன் யாதவ்,எம்.குணசேகரன், கிருஷ்ணகிரி இராமகிருஷ்ணன், சைதை பி.இராஜேந்திரன், ஆலந்தூர் ஜி.இராஜேந்திரன்,மாவட்டத் தலைவர்கள் கே. கோதண்டராமன், மீனம்பாக்கம் துரைபாபு, இளைஞரணி பி.ஜெகநாதன், துணை செயலாளர் ராஜமன்னார், கோடம்பாக்க வெங்கடேசன்,பகுதி செயலாளர்கள் சி.ரங்கராயல்,டி.ஆர.எஸ். ஜெகநாதன்,எஸ்.வசந்தராஜ், இரா.முத்தையன் யாதவ், கொளத்தூர் ஜி. அன்பழகன்,வடபழனி தாஸ்,துரைப்பாக்கம் இ.ஜெகநாதன், துரைப்பாக்கம் வி.குமார் யாதவ், A.திருவரசமூர்த்தி, T.அண்ணாதுரை, சந்தோஷ் ராஜா, சேப்பாக்கம் ராமச்சந்திரன், எஸ்ஆர்எம்.முனியன், கோவூர் கண்ணன், தாம்பரம் காசிநாதன், தாம்பரம் மோகன், திருப்போரூர் குணசேகரன், இராமச்சந்திரன்,தேவதாஸ்,மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்