![](admin/uploads/.610a41ecb88ef4.24461513.jpg)
Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
அமராவதி: ஆந்திராவில், மதுவுடன் சானிடைசர் கலந்து குடித்த 7 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டதால், சிலர் போதைக்காக மாற்றுவழிகளை தேடி வருகின்றனர்.ஆந்திராவின் பிரகாசம் மாவட்டம் குரிசெடு கிராமத்தில், என்ற பகுதியில் போதைக்காக, மதுவுடன் சிலர் சானிடைசரை கலந்து குடித்தனர்.
இதில் 7 பேர் உயிரிழந்தனர். அதில் 3 பேர் பிச்சைக்காரர்கள் எனவும், 4 பேர் குரிமேடு கிராமத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் சிலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.