Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் ஜூலை மாதத்தில் 1.51 லட்சம் பேருக்கு கொரோனா: 1.31 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்

ஆகஸ்டு 01, 2020 06:59

சென்னை: தமிழகத்தில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் கொரோனா பாதித்து குணமடைந்த 1.31 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும், குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே தான் போகிறது. தமிழகத்தில் இதுவரை 2,45,859 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் 1,83,956 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று (ஜூலை 31) ஒரே நாளில் 5,881 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, சிகிச்சை பெற்று குணமடைந்த 5,778 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். பாதிப்புக்கு இணையாக டிஸ்சார்ஜ் எண்ணிக்கையும் இருந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் தமிழகத்தில் 14.13 லட்சம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதில் 1.51 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 1.31 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 2,671 பேர் உயிரிழந்துள்ளனர். ஜூலையில் மட்டும் 19 மாவட்டங்களில் கொரோனா தொற்று ஆயிரத்தையும், நான்கு மாவட்டங்களில் 10 ஆயிரத்தையும் கடந்துள்ளது. மேலும் 5 மாவட்டங்களில் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது.

தலைப்புச்செய்திகள்