Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உத்தர்காண்டில் வெள்ளத்தில் சிக்கிய எம்.எல்.ஏ. மீட்பு

ஆகஸ்டு 01, 2020 08:12

பித்ரோகார்: உத்தர்காண்ட் மாநிலத்தில் வெள்ள சேதத்தை பார்வையிட வந்த காங். எம்.எல்.ஏ. ஆற்றில் தவறி விழுந்து வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார். அவரை கிராமத்தினர் மீட்டனர். உத்தர்காண்ட் மாநிலத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழையால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பித்ரோகார் மாவட்டத்தில் தர்சூலார் என்ற பகுதியைச் சேர்ந்நத காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹரிஷ்தாமி நேற்று தனது ஆதரவாளர்களுடன் அப்பகுதியில் வெள்ள பாதிப்பை பார்வையிட அங்கு உள்ள சிறிய ஆற்றை கடந்து செல்ல முயன்ற போது நிலை தடுமாறி ஆற்றில் விழுந்தார்.

 அவரை வெள்ளம் இழுத்துச்சென்றது. அப்போது, உடனிருந்த ஆதரவாளர்கள் ஆற்றில் இறங்கி அவரை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
இதனிடையே சமோலி மாவட்டத்தில் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதாவது பஜ்பூர் என்ற இடத்தில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவால் பத்ரிநாத் சாலை மூடப்பட்டுள்ளது. இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாயின.

தலைப்புச்செய்திகள்