Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் 23 டி.எஸ்.பி.,க்கள் மாற்றம்: டி.ஜி.பி., உத்தரவு

ஆகஸ்டு 02, 2020 06:13

சென்னை:தமிழகத்தின் பல பகுதிகளில் பணிபுரியும், டி.எஸ்.பி.,க்கள், 23 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.சேலம் மாவட்ட, பொருளாதார குற்றப்பிரிவில் பணிபுரியும் செந்தில்குமார், கோவை மாவட்ட, நில மோசடி தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

திருப்பூர், மத்திய குற்றப்பிரிவில் பணிபுரியும் சுந்தரராஜ், கோவை மாவட்ட, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கும், தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் பணிபுரியும் சீனிவாசன், சேலம் மாவட்டம், மேட்டூருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.இவர்களை போல, தமிழகத்தின் பல பகுதிகளில் பணிபுரியும், டி.எஸ்.பி.,க்கள், 23 பேரை, பணியிட மாற்றம் செய்து, டி.ஜி.பி., திரிபாதி, உத்தரவிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்