![](admin/uploads/.5c7cd782f0d2f0.36587096.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட போலீசார் உற்சாகமாக பணியாற்ற வேண்டி, ஊட்டச்சத்துமாவு பொட்டலங்களை போலீஸ் எஸ்.பி. மணிவண்ணன் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டம் முழுவதிலுமாக போலீசார், பல்வேறு அரசுத்துறையினருடன் இணைந்து, கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் மட்டுமல்லாது, பொதுமக்கள் நலன் சார்ந்த மற்ற பணிகளிலும், சுழற்சி முறையில், 24 மணிநேரமும் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு தொடர்ச்சியாக பணிபுரிந்து வரும் அவர்களின், உடல்நலன்களை கருத்திற்கொண்டு, அனைவருக்கும் நெஸ்ட்லே மைலோ நிறுவனத்தின் சார்பில், "ஆக்டிவ் கோ எனர்ஜி பவுடர்" என்றழைக்கப்படும், "ஊட்டச்சத்து மாவு பொட்டலங்கள்" வழங்கப்பட்டன. மாவட்ட போலீஸ் எஸ்.பி. மணிவண்ணன், அவற்றை போலீஸாருக்கு வழங்கி, உற்சாகத்துடன் பணிபுரியுமாறு கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், "நெஸ்ட்லே" நிறுவனத்தின் மேலாளர் லோகேஷ், உதவி மேலாளர் ஜெகன் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.