Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உ.பி. பெண் அமைச்சர் கொரோனாவுக்கு பலி

ஆகஸ்டு 02, 2020 08:14

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் தொழில்நுட்ப கல்வி அமைச்சர் கமல் ராணி  கொரோனாவால் பலியானார்.

உத்தரப்பிரதேச தொழில்நுட்ப கல்வி அமைச்சர் கமல் ராணிக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து ஜூலை 18ம் தேதியன்று லக்னோ சஞ்சய்காந்தி முதுகலை மருத்துவமனை அறிவியல் நிலையத்தில் சிகிச்சைக்காக கமல் ராணி சேர்க்கப்பட்டார்.
தொடர்ந்து மருத்துவமனையில் தங்கி கமல் ராணி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. 

நாட்டில் முதன்முதலாக மாநில அமைச்சர் ஒருவர் கொரோனாவால் பலியாகி இருக்கிறார். ஏற்கனவே கொரோனாவுக்கு எம்.எல்.ஏ.க்கள் சிலர் பலியாகி உள்ளனர். அமைச்சர் கமல் ராணியின் மறைவுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பிரதமர் மோடியின் ஹேக்காதான் உரையை ட்விட்டரில் ரீ ட்வீட் செய்திருந்தார் கமல் ராணி என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்