Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெல்லி, மும்பை, சென்னையில் கொரோனா பரவல் விகிதம் குறைந்தது

ஆகஸ்டு 04, 2020 07:25

புதுடெல்லி: சென்னை, டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் கொரோனா பரவல் விகிதம் சரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளில் கவனமாக இருக்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

இதில் சென்னை, மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் கொரோனா பரவல் விகிதம் குறைந்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அதாவது தொற்றுக்கு உள்ளான ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் இனப்பெருக்க விகிதம் ('ஆர்' மதிப்பு) குறைந்துள்ளது.
அந்தவகையில் டில்லியில் இந்த மதிப்பு 0.66 ஆக உள்ளது. அதாவது தொற்றுக்கு உள்ளான ஒவ்வொரு 100 பேரிடம் இருந்தும் சராசரியாக 60 பேருக்கு மட்டுமே கொரோனா பரவுகிறது. இது மும்பையில் 0.81 ஆகவும், சென்னையில் 0.86 ஆகவும் உள்ளது.

இவை தேசிய சராசரியான 1.16-ஐ விட குறைவாகும். நாட்டில் அதிகபட்சமாக ஆந்திராவில் இந்த 'ஆர்' மதிப்பு 1.48 ஆக இருப்பதாக இந்த ஆய்வை மேற்கொண்ட குழுவின் தலைவரான சென்னை கணித அறிவியல் நிறுவன பேராசிரியர் சிதாப்ரா சின்கா கூறியுள்ளார்.
இவ்வாறு கொரோனாவின் 'ஆர்' மதிப்பு குறைந்து வருவது கொரோனாவின் தற்போதைய அலையில் சரிவு ஏற்பட்டிருப்பதை காட்டுவதாகவும், தொடர் தனிமைப்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டால் மிக விரைவில் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் எனவும் கோல்கட்டாவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவன பேராசிரியர் திப்யேந்து நாண்டி தெரிவித்தார்.

கொரோனா பரவல் விகிதத்தில் ஏற்பட்டுள்ள இந்த சரிவு உண்மை என்றால், நமது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டாலே தொற்றை குறைக்க முடியும் என அரியானா அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கவுதம் மேனனும் தெரிவித்தார்.

அதேநேரம் இந்த நேரத்தில் பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கையில் மெத்தனமாக இருந்தால் விளைவுகள் மோசமாகி விடும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மிகவும் கவனமாக இருக்குமாறு அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்